தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு அதிமுக - ஓ.பி.எஸ். அணி திடீர் வாக்குவாதம் போலீஸ் சமரசம்

Advertisement

நாகர்கோவில் அக்.18 : அதிமுகவின் 54 ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வடசேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் சுகுமாறன், அட்சயா கண்ணன், ஜெயசீலன், கவுன்சிலர்கள் லிஜா, அனிலா, ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அந்த சமயத்தில் ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையிட வந்தனர். அப்போது அவர்கள் சிலையின் முன் பகுதியில் சிலை பராமரிப்பாளர் வடசேரி பகுதி - அதிமுக என்று இருந்த போர்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை துணி வைத்து மறைக்க முயன்றனர். இதை பார்த்ததும் அங்கு நின்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷம் எழுப்பி ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை நோக்கி பாய்ந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் திடீரென காரில் இருந்து இறங்கி ஆவேசமாக பேசிக் ெகாண்டு வந்தார். உடனடியாக அந்த பகுதியில் நின்ற போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மாலை அணிவித்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement