தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக-கேரளா எல்லையில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி 2 குழந்தைகள் கவலைக்கிடம்

அருமனை,அக்.17: தமிழக- கேரளா எல்லை பகுதியான அம்புரியில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தை ஒட்டிய கேரள பகுதியில் தற்போது பிரபலமாகி வரும் சுற்றுலாத்தலமான கும்பச்சல்கடவு பாலம் பகுதியை சேர்ந்தவர் மோகனன் காணி. இவர் தனது மனைவி சாவித்ரி, மகன் அருண், மருமகள் சுமா மற்றும் பேர பிள்ளைகள் அபிஷேக் (11) மற்றும் அனஸ்வரா (14) ஆகியோருடன் ஒன்றாக வசித்து வருகிறார்.நேற்று காலை காட்டில் இருந்து சேகரித்து வந்த காளான்களை அவர்கள் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து அப்பகுதியினர் அவர்கள் 6 பேரையும் காரக்கோணம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுமாவைத் தவிர மற்ற அனைவரும் மயக்கமடைந்திருந்ததாக நெய்யார் டாம் போலீசார் தெரிவித்தனர். 6 பேரும் தற்போது காரக்கோணம் தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் அபிஷேக் மற்றும் அனஸ்வராவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து நெய்யார் டாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement