தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெய்யாற்றின்கரை அருகே சுற்றுலா பயணிகள் மீது பீர் பாட்டில் வீச்சு போதை ஆசாமி கைது

திருவனந்தபுரம், அக். 16: கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே சுற்றுலா பயணிகள் மீது பீர் பாட்டில் வீசிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள பொழியூர், ஒரு சுற்றுலா பகுதியாகும். ஆறும், கடலும் கலக்கும் இந்த இடத்தை சுற்றிப் பார்ப்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு உல்லாச படகு சவாரியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியைச் சேர்ந்த சனூஜ் (34) என்ற வாலிபர், குடிபோதையில் படகில் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா பயணியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். அதை பார்த்த மற்ற பயணிகள் அவரை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சனூஜ் திடீரென தன்னிடம் இருந்த பீர் பாட்டிலை தூக்கி வீசினார். இதில் படகில் இருந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அல்கர்தாஸ் என்பவரின் 3 வயது சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுமி நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே சனூஜை அந்த பகுதியினர் பிடித்து பொழியூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News