மணவாளக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது
குளச்சல், ஆக.12: மணவாளக்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ. ராம் சங்கர் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது மணவாளக்குறிச்சி அருகே படர்நிலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த மணி என்ற ஒற்றைகண் மணி (56) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மணியை கைது செய்தனர்.