தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திக்கணங்கோட்டில் ரெடிமேட் பாலம் அமைக்கும் பணி நிறைவு வாகன போக்குவரத்து துவக்கம்

கருங்கல், அக். 11: குமரி மாவட்டம் பரசேரி முதல் புதுக்கடை வரையிலான சாலையில், பல்வேறு இடங்களில் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள வாய்க்கால் பாலங்கள் குறுகலாக காணப்பட்டதால், பழைய பாலங்களை உடைத்து விட்டு அந்த பகுதியில் அகலமாக புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திக்கணங்கோட்டில் இருந்து கருங்கல் செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் பாலத்தை விரிவாக்கம் செய்து, புதிதாக அமைப்பதற்காக பழைய பாலம் உடைக்கப்பட்டது. மிக முக்கியமான சாலை என்பதால் ஒரு மாதத்தில் திக்கணங்கோடு பாலம் பணி முடிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Advertisement

ஆனால், கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான பெரிய பைப் லைன், சாலைக்கு அடிப்பகுதியில் சென்ற நிலையில், அதை மாற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ராட்சத குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, கால்வாயில் மண் அகற்றப்பட்டு, அடிப்பகுதியில் கான்கிரீட் போடப்பட்டு, அதன் மேல் ராட்சத கிரேன் உதவியுடன் ரெடிமேட் பெரிய ஹாலோ கான்கிரீட்கள் மூலம் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தது.

அதை தொடர்ந்து மேல் பகுதியில் மண் நிரப்பும் பணிகள் முடிந்தது. இதையடுத்து நேற்று இரவு முதல் பைக், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள், இந்த பாலம் வழியாக செல்ல நெடுஞ்சாலை துறையினர் அனுமதித்துள்ளனர். ஒரு நாள் இடைவெளி விட்டு கனரக வாகனங்கள் இந்த பாலம் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை தக்கலை உட்கோட்ட உதவி பொறியாளர் ரெஜ்வின் தெரிவித்துள்ளார்.

Advertisement