தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எர்ணாகுளம் அருகே போதைப்பொருள் விற்ற டாக்டர் கைது

திருவனந்தபுரம், செப். 11: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே எம்டிஎம்ஏ போதைப்பொருளை விற்க முயற்சித்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத் அஹ்சான் (33). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா கால் சென்டர் செயல்பட்ட போது அங்கும் பணிபுரிந்தார். இந்தநிலையில் அம்ஜத் அஹ்சான் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார். இதை தொடர்ந்து ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. இவர் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் கொச்சி புல்லேப்படி பகுதியில் போதைப்பொருள் விற்க முயற்சிப்பதாக கொச்சி மத்திய போலீசுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் 840 மிகி எம்டிஎம்ஏவுடன் டாக்டர் அம்ஜத் அஹ்சான் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement