தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தி.மு.க. அயலக அணி சார்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி பாபு வினிபிரட் தலைமையில் நடந்தது

நாகர்கோவில், ஆக. 9: குமரி மாவட்டத்தில் தி.மு.க. அயலக அணி சார்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாபு வினிபிரட் தலைமையில் நடந்தது. தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் கருணாநிதியின் நினைவுநாள் நிகழ்ச்சி குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்தது. மேலும் திமுக அயலக அணியின் துணை செயலாளர் பாபு வினிபிரட் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக பாபு வினிபிரட் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து குளச்சல் அண்ணாசிலை எதிரில் திமுக அயலக அணி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு பாபு வினிபிரட் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் நாகூர்கான், நகரசபை தலைவர் நசீர், மகளிர் அணியை சேர்ந்த லதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை பஸ் நிறுத்தம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கும் பாபு வினிபிரட் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் அகமதுஷா, சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வேறு சில இடங்களிலும் அயலக அணி சார்பில் கருணாநிதி உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.