தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வட்டக்கோட்டையில் ரூ.14.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

 

Advertisement

கருங்கல், நவ. 7: கிள்ளியூர் பேரூராட்சி வட்டக்கோட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டிதர அந்த பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க நிலம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நிலத்தை இலவசமாக வழங்கினார். தொடர்ந்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதைத்தொடர்ந்து புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது வட்டக்கோட்டையில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து, புதிய கட்டிடத்தை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. குழந்தைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஒபிசி பிரிவு மாவட்ட தலைவர் சிஜின் ஆல்பர்ட், பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ஆல்பர்ட் ஜெனில், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜூ, காங்கிரஸ் நிர்வாகிகள் கிளெமெண்ட், சுனிதா, ஏசுதாஸ், ஜோஸ், றோஸ்மேரி, சுபிஹெலன், சாமுவேல், பிரதாப்சிங், கிள்ளியூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் டெல்மா, ஜெயராணி, ஸ்டாலின், நிலம் கொடுத்தவரின் தந்தை ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement