தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி நகை பறிப்பு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

திருவனந்தபுரம், அக். 7: கேரளாவில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பெண்ணிடம் இருந்து 10 பவுன் நகை பறித்த இளைஞர் காங்கிரஸ் தலைவரை கோழிக்கோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஷெனீர் (28). நீலேஸ்வரம் மண்டல இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், ஐஎன்டியூசி தலைவராகவும் உள்ளார். இந்தநிலையில் ஷெனீர் பேஸ்புக்கில் போலி கணக்கை தொடங்கி கோழிக்கோட்டை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement

அதன்படி 2 பேரும் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அந்த பெண்ணை இவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஒரு அவசர தேவை இருக்கிறது என்று கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து ஷெனீர் 10 பவுன் நகையை வாங்கி உள்ளார். ஒரு மாதத்தில் நகையை திருப்பித் தருவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆன பிறகும் ஷெனீர் நகையை திருப்பிக் கொடுக்க வில்லை. மேலும் அவர் தன்னுடைய செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் சம்பவம் குறித்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நீலேஸ்வரத்தில் வைத்து ஷெனீரை கைது செய்தனர். முகம்மது ஷெனீர் இதற்கு முன்பு நீலேஸ்வரத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றி நகைகளை பறித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement