தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவிலில் ரயிலில் விழுந்து தொழிலாளி தற்கொலை உடல்நிலை பாதிப்பால் மனம் உடைந்தார்

நாகர்கோவில், அக்.7: நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் செண்பகராமன்புதூரை அடுத்துள்ள கண்ணன்புதூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (65) என்பது தெரிய வந்தது. அவருக்கு மனைவி, 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Advertisement

சண்முகத்திற்கு சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில், திருவனந்தபுரத்திற்கு சிகிச்சைக்கு செல்ல போவதாக கூறிவிட்டு நேற்று அதிகாலை சண்முகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். இவ்வாறு வந்தவர் கன்னியாகுமரியில் இருந்து மங்களூரு செல்லும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அந்த மன வருத்தத்தில் சண்முகம் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement