தக்கலை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
குமாரபுரம், நவ. 6: தக்கலை அருகே குழிக்கோடு திட்டவிளையை சேர்ந்தவர் கனகராஜ் (80). இவரது மனைவி செல்லம்மாள் (74). இந்த தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கனகராஜ், அவரது மனைவியுடன் மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கனகராஜ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவருக்கு சற்று மனநிலை பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கனகராஜ், தென்னைக்கு வைக்கும் விஷத்தை குடித்துவிட்டார். பின்னர் குடும்பத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கனகராஜ் இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.