குழித்துறை அருகே மீனவர் தூக்குப்போட்டு சாவு
மார்த்தாண்டம், ஆக.6: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மூதாக்கரை மீனவர் காலனியை சேர்ந்தவர் சேவியர் (64). மீன்பிடி தொழிலாளி. இவர் குழித்துறை அடுத்த பழவார் பனவிளை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவருக்கு வாதம் உள்ளிட்ட நோய்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சேவியர் வீட்டின் அருகில் உள்ள பக்க சுவர் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனே விரைந்து வந்த போலீசார் சேவியரின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இதுகுறித்து அவரது மகள் சுகுணா சேவியர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.