தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டம், ஆக. 6: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பாஜ சார்பில் குழித்துறை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. குழித்துறை அரசு மருத்துவமனை வெட்டுவெந்நியில் உள்ளது. இங்குள்ள கழிவுநீர் மற்றும் கழிப்பிடக் கழிவுநீர் வடிகால் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாஜ சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதைப்போல் குழித்துறை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இருந்து கழிவுநீர் ரோடு வழியாக பாய்ந்து வடிகாலில் சேருகிறது. கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதை கண்டித்து குழித்துறை நகர பாஜ சார்பில் குழித்துறை பொதுப்பணித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. குழித்துறை நகர பாஜ தலைவர் சுமன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் நந்தினி, மருதங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர், வக்கீல் பவுல் ராஜ், குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் விஜூ, ரத்தினமணி, மினி குமாரி, ஜெயந்தி, செல்வகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.