தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாம்பழத்துறையாறு அணையில் 40 கன அடி தண்ணீர் திறப்பு

நாகர்கோவில், செப்.3: குமரி மாவட்டத்தில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. மாவட்டத்தில் பாலமோர், மாம்பழத்துறையாறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்திருந்தது. இந்தநிலையில் மாம்பழத்துறையாறு அணையில் இருந்து வினாடிக்கு 40 கன அடி தண்ணீர் நேற்று திறந்துவிடப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.16 அடியாகும். அணைக்கு 475 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 562 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 62.75 அடியாகும். அணைக்கு 143 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

Advertisement

385 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 6.79 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 168 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 6.89 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.3 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 24.28 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 9.5 அடியாகும். குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்துள்ளது.

Advertisement