தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருமனையில் பரபரப்பு; அடகுவைத்த நகையை திருப்பி கேட்டு நிதி நிறுவனத்தில் பெண் திடீர் தர்ணா

அருமனை, செப்.2: அருமனை அருகே சூரகாட்டுவிளையை சேர்ந்தவர் அருள் கிறிஸ்டோபர். அவரது மனைவி ஜீனா (42). இவர் கடந்த பிப்ரவரி மாதம் நெடுங்குளம் சந்திப்பில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 4 கிராம் நகையை அடகு வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஜீனா அடகுவைத்த நகையை திருப்ப அட்டையுடன் சென்றுள்ளார். அப்போது நிதி நிறுவனத்தினர், உங்களுடைய நகை இங்கு இல்லை என்று கூறி உள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜீனா அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

Advertisement

ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை ஜீனா மீண்டும் தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்றார். பின்னர், தான் அடகு வைத்த நகையை திருப்பி தருமாறு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த அருமனை எஸ்.ஐ சுஜின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜீனா மற்றும் நிதிநிறுவன ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், வருகிற வியாழக்கிழமை நகையை திருப்பி தருவதாக நிதி நிறுவன ஊழியர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து ஜீனா போராட்டத்தை கைவிட்டார்.

 

Advertisement

Related News