தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவிலில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 3 ஆண்டு ஜெயில்

நாகர்கோவில், நவ. 11: குமரி மாவட்டம் செண்பராமன்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசுப்பு (65). இவர் நாகராஜா கோயிலில் உள்ள காலணி பாதுகாப்பு அறையில், டோக்கன் வழங்கும் பணி செய்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு, ராமசுப்பு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே நின்றார். அப்போது தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த 15வயது மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் வந்தனர். அவர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி படித்தனர்.

Advertisement

ராமசுப்பு சிறுவர்களிடம் பேச்சுக்கொடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சிறுவர்களை அழைத்துசென்றார். அங்கு அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு படிப்பகத்திற்கு அந்த சிறுவர்களை அழைத்து சென்று, அங்கு வைத்து சிறுவர்களிடம் ராமசுப்பு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறுவர்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் ராமசுப்பு மீது போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், ராமசுப்புக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement