தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் இந்திய அரசியலமைப்பு நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மாணவர்கள் மரியாதை

வாலாஜாபாத், நவ.29: வாலாஜாபாத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள இந்திய அரசியலமைப்பு நினைவு தூணுக்கு மாஅலை அணிவித்து மாணவர்கள் மரியாதை செலுத்தினர். வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 1975ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முகவுரை நினைவு தூண், அரசியலமைப்பு தினத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் அந்தத் தூணில் அரசியலமைப்பின் 78வது ஆண்டு நினைவு விழாவையொட்டி, நாட்டின் அடிப்படை மதிப்புகளான சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் நீதி போன்ற கொள்கைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த நினைவு தூண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. வாலாஜாபாத் வரலாற்று ஆய்வாளர் அஜய்குமார் கூறுகையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தூணை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement

இதனையடுத்து, வாலாஜாபாத் அரிமா சங்கம் மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நினைவு தூண் மலர்களால் அலங்கரித்து, மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு முகவுரை தூணில் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத் லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் தனராஜன், செயலாளர் ராம், பொருளாளர் தீனதயாளு, உறுப்பினர்கள் காயம்மாள், சேகர், சசிகுமார், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் வெங்கடேசன் உள்ளிட்ட வரலாற்று ஆர்வலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement