தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

காஞ்சிபுரம், செப்.27: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டம் நடத்திட மாநில தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில், 150க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஒன்று திரண்டனர்.

Advertisement

அவர்கள், திட்ட முகாம்களினால் பனிச்சுமை அதிகரிப்பதாகவும், கால அவகாசம் கூட வழங்காமல் இரவோடு இரவாக பணிகளை முடிக்க நிர்பந்திப்பது அலுவலர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது எனக்கூறி, திட்ட பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசேகரன், நவீன்குமார், பாலாஜி, வெங்கடேசன், ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் கோவர்த்தனன், கூட்டமைப்பு நிர்வாகிகள் லெனின், துரை மருதன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement