தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கியது

போரூர், செப்.27: ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை நேற்று தொடங்கியது. அக்டோபர் 5ம் தேதி வரை இந்த சந்தை நடக்கிறது. இதில் பொறி, கடலை, வாழைப்பழம், வாழை இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்ய தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும், வியாபாரிகளுக்கு குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்து தரப்படும் எனவும் அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கு பெண்களுக்கு தனி கழிவறை மற்றும் வியாபாரிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்து அதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சிறப்பு சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்யாமல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொறி, கடலை போன்ற பொருட்களை விற்பனை செய்ததால் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் இதுபோல் நடக்காதவாறு அங்காடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை அங்காடி நிர்வாகம் நியமிக்க வேண்டும். கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமித்து வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

Advertisement