தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்றத்தூர் அருகே நூதன முறையில் திருடிய கார் மீட்பு: குற்றவாளிக்கு வலைவீச்சு

குன்றத்தூர், அக்.26: குன்றத்தூர் அருகே நூதன முறையில் திருடப்பட்ட காரை பறிமுதல் செய்து, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார் (42). இவர், சொந்தமாக கார் வைத்து, ஆன்லைனில் இணைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் இருந்து காரை ஆன்லைனில் புக் செய்து, குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் வரை வந்த தினேஷ் என்ற நபர், வீட்டில் இருக்கும் தனது வயதான அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில், காரை நிறுத்திவிட்டு மகேந்திரகுமார் இறங்கிச்சென்ற சிறிது நேரத்தில், மின்னல் வேகத்தில் அந்த நபர் காரை திருடிச்சென்றார்.

Advertisement

இதுகுறித்து மகேந்திரகுமார், குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேந்திரகுமாரின் சொகுசு காரை தேடியபோது, அந்த கார் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், சாவியுடன் இருந்த திருடப்பட்ட காரை பறிமுதல் செய்து, காரை திருடிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். குடிபோதையில் காரில் பயணம் செய்த நபர், காரை திருடிக்கொண்டு அவர் பணிபுரியும் கம்பெனிக்கு அருகிலேயே காரை நிறுத்திவிட்டு சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News