தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்: பெண் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

செங்கல்பட்டு, செப்.24: பெருங்களத்தூரைச் சேர்ந்த திருநங்கைகள் 32 பேருக்கு காட்டாங்குளத்தூர் ஒன்றியம், ஓழலூர் கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், பட்டா வழங்கப்பட்டதற்கான ஆவணம் சிலருக்கு வழங்கப்படவில்லை, என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் தலையிட்டு ஓழலூர் கிராமத்தில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்து எல்லைக் கற்கள் நட்டனர். இந்நிலையில், திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இடத்தில் இருந்த எல்லை கற்களை மர்ம நபர்கள் அகற்றியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள், நேற்று செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். வட்டாட்சியர் இல்லாத நிலையில், திடீரென்று ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட வட்டாட்சியர் அலுவலக பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் திகைத்து நின்றனர். மேலும், அலறியடித்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். இதனால் வட்டாட்சியர் அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூறி கலைந்து சென்றனர். திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

Related News