தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வெள்ள தடுப்பு பணி தீவிரம்: கலெக்டர் ஆய்வு

கூடுவாஞ்சேரி, அக்.23: தமிழகத்தில் தற்போது வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் விட்டுவிட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், உதயசூரியன் நகர், பகுதிகளில் உள்ள உபரி நீர், வடிநீர் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் சினேகா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து, காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு பிரியா நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சுற்றி மழைநீர் தேங்கியிருந்ததை, கலெக்டர் சினேகா நேரில் சென்று ஆய்வு செய்து வீடுகளை சுற்றி தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். பின்னர், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மற்றும் காரணைப்புதுச்சேரி ஊராட்சிகளை இணைக்கும் சந்திப்பு இடத்தில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட உஷா நகரில் உள்ள உபரிநீர் கால்வாயினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஜெகதீஷ் நகரில் செல்லும் உபரிநீர் கால்வாயினை கலெக்டர் சினேகா பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, வண்டலூர் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், மீனாட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் சந்தானம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

Related News