தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் உள்பட இருவர் கைது

மதுராந்தகம், நவ.22: மதுராந்தகத்தில் 15 சென்ட் இடத்தில் மூன்று சென்ட் இடத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்ய வந்தவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஈசூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி கலா பெயரில் உள்ள 15 சென்ட் இடத்தில் மூன்று சென்ட் இடத்தை சிவம் தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்ய மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகம் வந்துள்ளார். அதற்கு சார்பதிவாளர் கார்த்திகேயன் லஞ்சமாக ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். இறுதியாக பேரம் பேசி ரூ.15 ஆயிரம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பத்திரப்பதிவு செய்யும்போது ரூ.10 ஆயிரமும், மீதி பணம் ரூ.5 ஆயிரம் நிலம் எழுதி கொடுத்ததற்கான பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெறும்போது கொடுப்பது என பேசி முடிவு செய்யப்பட்டது.

Advertisement

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சிவராமன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவராமனிடன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து, சிவராமன் நேற்று சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று சார்பதிவாளர் கார்த்திகேயனிடம் லஞ்சப் பணம் 10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது, சார்பதிவாளர் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கார்த்திகேயனை கையும், களவுமான கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பத்திர எழுத்தர் சிவா என்பவரையும் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். லஞ்சப் பணம் வாங்கிய சார்பதிவாளர், பத்திர எழுத்தர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியது.

Advertisement

Related News