தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.8.73 லட்சம் பயிர் கடன்: காஞ்சி கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம், நவ.22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், மாவட்ட கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, துறைச்சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

Advertisement

இதனைத்தொடர்ந்து, தாமல் மற்றும் புள்ளலூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்து 688 மதிப்பிலான பயிர் கடன்களையும், 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.52 ஆயிரத்து 677 மதிப்பிலான (நுண்ணீர் பாசன செயலாணையும், மண்புழு உரபடுக்கையும்) வேளாண் இடுப்பொருட்கள் என மொத்தம் ரூ.8 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

அப்போது கலெக்டர், பயிர்கடன் பெற்ற விவசாய பயனாளிகள், விவசாய நிலத்தில் விதைகள் விதைக்கபடுவது முதல் அறுவடை காலம் வரை பல்வேறு காலகட்டங்களில் பயிர் நன்றாகவும், பூச்சிகளின்றி பாதுகாக்கவும் மற்றும் மகசூல் அதிகமாக தருவதற்கும் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே தரமான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்கு முன்பணம் தேவைப்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கி மூலம் பயிர்கடன் வழங்கி, விவசாயிகளுக்கு பயனுள்ள பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு, வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News