தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் அரசு மருத்துவமனையில் காவலாளி விரலை கடித்த முதியவரால் பரபரப்பு

தாம்பரம், நவ.21: தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காவலாளி விரலை கடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் அடுத்த பம்மல், பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அம்பிகாபதி (56). இவர் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் பணியில் இருந்தார். அப்போது கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சின்னா (59) என்பவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றுகூறி ஊசி போடும் அறை எங்கே என்று கேட்டார். அப்போது காவலாளி அம்பிகாபதி தவறான அறையை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சின்னா காவலாளி அம்பிகாபதியுடன் கைகலப்பில் ஈடுபட்டு அவரது கை விரலை கடித்தார். இதனால் வலி தாங்க முடியாமல் காவலாளி கத்தியதால் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து காவலாளியை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் சின்னாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News