தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளநிலை பொறியாளர் தற்கொலை வழக்கு பணிமனை கிளை மேலாளர் உள்பட இருவருக்கு வலை

தாம்பரம், நவ.21: தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக இளநிலை பொறியாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவான பணிமனை கிளை மேலாளர் மற்றும் எச்ஆர்டி பெண் அலுவலர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, ஆதனூர் ஜவகர் ஐயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (40). இவர் தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு காட்டாங்கொளத்துார் - பொத்தேரி இடையே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் யுவராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு மரண வாக்குமூலமாக இ-மெயில் அனுப்பியது தெரியவந்தது. அதில் அவரது தற்கொலைக்கு பணிமனை கிளை மேலாளர் கோவிந்தராஜ், எச்ஆர்டி சொர்ணலதா ஆகிய இருவர்தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மேற்கண்ட இருவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தகவல் அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News