தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம்

பெரும்புதூர், ஆக.21: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆவணி மாதம் முதல் செவ்வாயையொட்டி, மூலவர்  வள்ளி - தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கும் மண்டலாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். பெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் கிருத்திகை நாளிலும், செவ்வாய் கிழமையிலும் வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், இழந்த பதவி, நலமான வாழ்வு ஆகியன கிடைப்பதாக ஐதீகம். அதனால், மேற்படி நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

Advertisement

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆவணி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால், நேற்று முன்தினம் அதிகாலை முதற்கொண்டே பக்தர்கள் வல்லக்கோட்டையில் குவிந்தனர். காலை 5 மணிக்கு கருவறையில் உள்ள மூலவர்  வள்ளி - தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கும் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவர் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எலுமிச்சை மாலை மற்றும் சாமந்தி மலர்மாலைகள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சஷ்டி மண்டபத்தில் உள்ள உற்சவர் கோடையாண்டவர் மலர் அலங்கார சேவையில் காட்சியளித்தார். இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, ``அரோகரா... அரோகரா..’’ என்று கோஷமிட்டு வரிசையில் சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு கதம்பசாதம், மோர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Related News