தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குப்பை கழிவுகளை கொட்டியபோது திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி: பல்லாவரம் அருகே பரபரப்பு

பல்லாவரம், ஆக.21: பல்லாவரம் அருகே திருநீர்மலையில் குப்பை கொட்டும் இடத்தில், குப்பை கழிவுகளை கொட்டியபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலம்பாக்கம், சத்யா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ஜான் பாஷா (33). இவர், தனக்கு சொந்தமாக லாரி மூலம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படி அகற்றப்படும் கழிவுகளை அரசு நெறி காட்டுதல் மூலம் முறையாக அப்புறப்படுத்தாமல், லாரியில் குப்பையை தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டு செல்லாமல், திறந்த நிலையிலேயே திருநீர்மலை குப்பைமேடு பகுதியில் கொட்டிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், நேற்று காலையும் வழக்கம்போல் அனகாபுத்தூரில் இருந்து திருநீர்மலை செல்லும் குவாரி சாலையில் உள்ள குப்பைமேடு அருகில் லாரியில் இருந்த குப்பையை கொட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது, நிறுத்தி வைத்திருந்த லாரியில் இருந்து திடீரென குபுகுபுவென கரும் புகை வந்தது. இதை கண்டு, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தபோது, காற்றின் மூலம் அருகில் இருந்த லாரியிலும் தீப்பற்றிக் கொண்டது தெரியவந்தது. இதனிடையே, இதுபோன்று குப்பை கழிவுகளை அஜாக்கிரதையாக திறந்த வெளியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் லாரியில் கொண்டு வந்து கொட்டிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.

Advertisement