தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கணவனை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் மனைவி, தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் உட்பட 5 பேர் கைது

பெரும்புதூர், ஆக.20: பெரும்பெரும்புதூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் மனைவி, தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (47). இவரது, மனைவி பவானி (38). இருவரும் அதே பகுதியில் பேரம்பாக்கம் - தண்டலம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளனர். இந்த, கடையில் திருவாரூரை சேர்ந்த மதன்ராஜ் (36) என்பவர் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், பிரியாணி மாஸ்டர் மதன்ராஜ்க்கும், பவானிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த ஹரி கிருஷ்ணன், மதன்ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையே பழக்கம் தொடர்ந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால், கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொடர்ந்து தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள ஹரி கிருஷ்ணனை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, மதன்ராஜ் கூலிப்படைகளுக்கு ரூ.15 லட்சம் கொடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிகிருஷ்ணன் பைக்கில் சென்றபோது, கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில், அதிர்ஷ்டவசமாக ஹரிகிருஷ்ணன் உயிர் தப்பினார். அதிர்ச்சியடைந்த, ஹரிகிருஷ்ணன் இதுகுறித்து பெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி பவானியை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கள்ளக்காதலன் மதன்ராஜ், கூலிப்படை தலைவன் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விஜய், விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement