தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் படிவம் திருத்த பணியை புறக்கணித்து வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரி, நவ.18: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் படிவம் திருத்த பணியை புறக்கணித்து வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீவிர வாக்காளர் படிவம் திருத்த பணி குறித்து வருவாய் துறையினருக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை எனக்கூறி, தேர்தல் ஆணையத்தை கண்டித்து, தமிழகம் முழுதும், வருவாய் துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக, கூடுவாஞ்சேரியில் இயங்கிவரும் வண்டலூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் துறை ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், தமிழகத்தில் தீவிர வாக்காளர் திருத்த பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் முறையாக வழங்கப்பவில்லை.

Advertisement

இதனால், விண்ணப்ப படிவம் வழங்குதல், நிரப்புதல் உட்பட பொதுமக்கள் கேட்கும் பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், ஊழியர்களால் சரியான பதில் கூற முடியவில்லை. முறையான பயிற்சி வழங்காமல், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை தேர்தல் ஆணையம் பழிவாங்குகிறது. ஏற்கனவே பணி சுமையால் வாடி வதங்கும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், தற்போதைய தேர்தல் பணியால், தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்றனர்.

Advertisement

Related News