தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு 35 பேர் தப்பியோட்டம்: மாங்காட்டில் பரபரப்பு

குன்றத்தூர், அக்.16: மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு தப்பியோடிய 35 பேரை, போலீசார் தேடி வருகின்றனர். மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஒரே ஒரு காவலாளி மட்டும், அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த 35 பேர், திடீரென ஒன்றுகூடி, அங்கு பணியில் இருந்த காவலாளியை தாக்கிவிட்டு, போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்றனர்.

Advertisement

இதுகுறித்து, மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதால் அவர்கள் தப்பினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 35 பேர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும். தப்பியோடிய நபர்களின் பட்டியலை சேகரித்து, அவர்களின் குடும்பங்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்து தேடி வருகின்றனர்.

Advertisement

Related News