தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே உடைந்து காணப்படும் சாலை தடுப்புகள்: விபத்து ஏற்படும் என வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்போரூர், செப்.16: திருப்போரூர் - மாமல்லபுரம் இடையே உடைந்து காணப்படும் சாலை தடுப்புகளை அற்றிவிட்டு, புதியதாக அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலை சுமார் 15 கிமீ தூரம் உள்ளது. இந்த, சாலையின் நடுவே எதிரெதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளாமல் இருக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் மழை வெள்ளம் காரணமாகவும், வாகன விபத்துகள் காரணமாகவும் இந்த சாலை தடுப்புகள் உடைந்து சேதமடைந்து விட்டன.

Advertisement

இவற்றில், சில இடங்களில் சாலை தடுப்புகள் உடைந்து சாலையின் நடுவே கிடக்கின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சேதமடைந்து கிடக்கும் சாலை தடுப்புகளின் மீது மோதி மீண்டும் விபத்தை சந்திக்கும் ஆபத்து உள்ளது. இதுமட்டுமின்றி, இச்சாலை தடுப்புகள் சேதமடைந்து இருப்பதை பயன்படுத்தி, சில வாகன ஓட்டிகள் அந்த பகுதியை யூ டர்ன் எடுக்கும் இடமாக மாற்றி விடுகின்றன. இதனாலும் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, நெடுஞ்சாலைத்துறை திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள உடைந்தும், சேதமடைந்தும் காணப்படும் சாலை தடுப்புகளை அகற்றி விட்டு, புதிய சாலை தடுப்புகளை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement