தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் வடிகால் பணிகளை சிஎம்டிஏ அதிகாரிகள் ஆய்வு

போரூர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக மார்க்கெட் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால், இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், மார்க்கெட் வளாகத்தில் நடைபெறும் வடிகால் பணிகளை சிஎம்டிஏ அதிகாரி ராஜான் பாபு மற்றும் கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதர பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். கோயம்பேடு மார்க்கெட் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement