தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சவுதியில் இருந்து கோலாலம்பூர் சென்றபோது நடுவானில் பறந்த விமானத்தில் பெண்ணுக்கு மூச்சுத்திணறல்: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

மீனம்பாக்கம், அக்.14: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து சுமார் 290 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு மலேசியாவின் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. சென்னை வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த பெண் பயணிக்கு திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாசிப்பதற்கு பெரிதும் அவதிப்பட்டார். இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தலைமை விமானி தகவல் தெரிவித்து, விமானத்தை தரையிறக்கி, அப்பெண் பயணிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை ஏற்பாடு செய்து அளிக்கும்படி வலியுறுத்தினார்.

Advertisement

இதைத் தொடர்ந்து, விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 4.45 மணியளவில் சென்னையில் அந்த விமானம் தரையிறங்கியது. அங்கு, தயாராக இருந்த மருத்துவ குழுவினர், மூச்சு திணறலால் அவதிப்பட்ட பெண் பயணிக்கு, ஆக்சிஜன் சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அப்பெண் பயணி சகஜ நிலைக்கு திரும்பி இயல்பாக சுவாசிக்கத் துவங்கினார். இதையடுத்து, நேற்று அதிகாலை 5.40 மணியளவில் அப்பெண் பயணியுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது.

Advertisement