தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் தரிசனத்திற்கு தனி வரிசை

காஞ்சிபுரம், செப்.14: காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பகதர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகளவில் கோயிலுக்கு வருகின்றனர். இதன் காரணமாக காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்கள் வருகையாள் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 2 முதல் 3 மணிநேரம் வரை காத்திருந்து அம்மனை தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

Advertisement

இதனால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே, உள்ளூர் பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, காமட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில், உள்ளூர் பக்தர்கள் சாமி தரசனம் செய்ய தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கார்யம் சுந்தரேசன் கூறுகையில்; `உள்ளூர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அம்மனை தரிசிக்க தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய தனி வரிசையில் செல்ல விரும்பினால், அவர்களுடைய ஆதார் கார்டு அசல் அல்லது அதன் நகலை காண்பிக்க வேண்டும். தவறினால், பொது வரிசையில் தான் அனுமதிக்கப்படுவர்’ என்றார்.

Advertisement

Related News