தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பள்ளிகளில் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரத்தில், அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், கவன ஈர்ப்பு ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காஞ்சிபுரம் காவலான் கேட் அருகில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில மதிப்புறு தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பேசினார். இந்த, ஆர்ப்பாட்டத்தில் மாநில மேலாளர் தலைமையிட செயலாளர் சீனு ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் மாணிக்கவேலு, மாவட்ட செயலாளர் திருவேங்கடம், நிர்வாகிகள் ராஜ்வி, ஆனந்தகுமார், ருக்குமணி, செந்தாமரை, செல்வி, வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

Related News