தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1670-1790ம் ஆண்டு வரையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான தொகுப்புகளை புத்தாக்கம் செய்து வெளியீடு: தமிழ்நாடு ஆவண காப்பகம் தகவல்

தாம்பரம், நவ. 13: கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் 1670 முதல் 1790ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையம் கடந்த நூற்றாண்டுகளைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் பிரிட்ஷஷ் பதிவுகளின் அச்சு பட்டியல்கள் என்றழைக்கப்படுகிற, 1800ம் ஆண்டிற்கு முற்பட்ட ஆவணங்கள் பழைய ஆவணங்களின் சுருக்க விவரங்களைத் தாங்கி உள்ளடக்கப் பதிவேடுகளாகத் திகழ்கிறது.

Advertisement

இத்தகைய ஆவணங்களின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மேற்சொன்ன அச்சு பட்டியல்கள் 45 தொகுப்புகளாக 1892 முதல் 1912 வரையிலான காலகட்டத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.இந்த உள்ளடக்கப் பதிவேடுகள் 1670 முதல் 1800 வரையிலான ஆண்டுகளின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளின் ஆவணங்களைப் பற்றியதாகும். கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாக அலகுகள் அமைந்திருந்த கஞ்சம், விசாகப்பட்டினம், மசூலிப்பட்டிணம், தென் ஆற்காடு மற்றும் மலபார் ஆகிய பகுதிகளின் நடவடிக்கைகள் தொடர்பான 603 ஆவணத் தொகுப்புகளுக்கும் உள்ளடக்கங்களைக் கொண்டவையாக மேற்சொன்ன 45 தொகுப்புகள் அமைந்துள்ளன.

வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் 1670ம் ஆண்டு முதல் 1800 வரையிலான காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் மேற்சொன்ன அச்சு பதிவுகளின் பட்டியல்கள் 45 தொகுப்புகளைத் தொழில் நுட்ப உதவியுடன் எண்ணிம வடிவிலும், சொல் அடிப்படையில் தேடுகிற வசதியுடன் கூடியதாகவும் மாற்றி மறுபதிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மேற்கொண்டது. இப்பணியில், தமிழ்நாடு ஆவணக் காப்பகம், கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பயனுறும் வகையில், 1670 முதல் 1790ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கான 35 உள்ளடக்கத் தொகுப்புகளை புத்தாக்கம் செய்து அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் வலைதளமாகிய www.digitamilnaduarchives.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் மேற்சொன்ன 35 உள்ளடக்கத் தொகுப்புகளைக் காணலாம். இவ்வாறு தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement