தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கியூபா நாட்டின் இந்திய தூதர் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை கண்டு ரசித்தார்

மாமல்லபுரம், ஆக. 13: இந்தியாவுக்கான கியூபா நாட்டு தூதர் மாமல்லபுரத்திற்கு வருகை தந்து அங்குள்ள கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தியாவுக்கான கியூபா நாட்டு தூதர் ஜுவான் கார்லோஸ் மார்சன் அகிலேரா என்பவர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். முன்னதாக, அர்ஜூனன் தபசு சிற்பம் அருகே மல்லை தமிழ்ச்சங்கம் சாா்பில், தலைவர் மல்லை சி.ஏ.சத்யா தலைமையில், தமிழ்ச்சங்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், பல்லவ மன்னர்கள் கை வண்ணத்தில் செதுக்கிய கடற்கரை கோயில், அர்ஜூன்ன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை கண்டு ரசித்து, அதன் முன் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

அவருக்கு, புராதன சின்னங்கள் எந்த காலத்தில் எந்த மன்னரால் செதுக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை மூத்த சுற்றுலா வழிகாட்டி சீனிவாசன் தெளிவாக விளக்கி கூறினார். அப்போது, கடற்கரை கோயில் உப்பு காற்றால் பாதிக்காத வகையில், எப்படி தொல்லியல் துறை நிர்வாகத்தால் பாதுகாக்கப்படுகிறது என கேட்டு தெரிந்து கொண்டார். தொடர்ந்து, கியூபா நாட்டின் தூதர் ஜுவான் கார்லோஸ் மார்சன் அகுலேரா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘தமிழகத்தின் கலாச்சரம் மற்றும் மொழியை இங்குள்ள பொதுமக்கள் பாதுகாத்து வருகின்றனர்’. இவர்களது, வாழ்வியல் முறை எனக்கு பிடித்துள்ளது. தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது, என்றார்.