தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரத்தில் இரு வழித்தடங்களில் நகர பேருந்து சேவை; எழிலரசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், அக்.12: காஞ்சிபுரத்தில் இரு வழித்தடங்களில் நகர பேருந்து சேவையை எழிலரசன் எம்எல்ஏ கொடியசைத்து, தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காஞ்சிபுரத்தில் நகரப் பேருந்து சேவை தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவுமான எழிலரசன், கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி காஞ்சிபுரத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ஆய்வுக்காக வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினியிடம் கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையை ஏற்று துணை முதல்வரின் பரிந்துரையின்படியும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவின்படியும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, காரப்பேட்டை ரயில் நிலையம், டோல்கேட் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வரை ஒரு பேருந்தும், ஒலிமுகமதுபேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் - செவிலிமேடு வரை என இரண்டு வழித்தடங்களில் செல்லும் புதிய நகர பேருந்து சேவை துவக்க விழா நேற்று நடந்தது.

Advertisement

இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, இரண்டு வழித்தடங்களில் செல்லும் புதிய நகரப் பேருந்து சேவையை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், பகுதி செயலாளர்கள் கே.திலகர், எஸ்.சந்துரு, அ.தசரதன், சு.வெங்கடேசன், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement