தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்தாமூர் பிடிஓ அலுவலகத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுகோள்

செய்யூர், டிச.11: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் பகுதியில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், வட்டார கல்வி மையம், அரசு மாணவியர் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தபால் நிலையம், நூலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதனால், தினமும் ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு பொதுமக்கள் கூடும் இந்த வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்நேரங்களில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், விடுதி மாணவிகள் வளாகத்திற்குள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் விடுதி மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில் வளாகத்தை சுற்றி மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வளாகத்தை சுற்றி மழைநீர் வடிகால்வாய் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News