தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

துரைப்பாக்கம், நவ.11: சென்னை மாநகராட்சி, 196வது வார்டு அதிமுக கவுன்சிலர் அலுவலகம் மற்றும் வார்டு அலுவலகம், கண்ணகி நகரில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கண்ணகி நகரைச் சேர்ந்த முனியா (50) என்பவரின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. கவுன்சிலர் அலுவலகம் வழியாக சென்றபோது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர், திடீரென கவுன்சிலர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அலறியடித்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இதில், அலுவலகத்தின் முன்பு இருந்த டியூப் லைட், மாநகராட்சி பலகை மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த கண்ணகி நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார், எதற்காக வீசினர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement