தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு வியாபாரிகளின் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

உத்திரமேரூர், அக்.11: உத்திரமேரூர் அடுத்த, காவனூர் புதுச்சேரி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவனூர்புதுச்சேரி, பாரதிபுரம், சோழனூர் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளின் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. புகாரின் பேரில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருள்வனிதா தலைமையில், உதவி மேளாளர் சுந்தரவடிவேல், கண்காணிப்பாளர் ஆனந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் காவனூர்புதுச்சேரி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேற்று சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, கொள்முதல் நிலையத்திற்கு நெல் ஏற்றி வந்த லாரி ஒன்றினை பிடித்து விசாரணை செய்த போது வியாபாரிகள் நெல்முட்டைகள் என தெரியவந்தது. உடனே தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக குழுவினர்கள் 190 நெல் மூட்டைகள் கொண்ட அந்த வியாபாரியின் லாரியினை பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இது யாருடையது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement