தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வணிக வளாகம் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

சோழிங்கநல்லூர்,செப்.11: சென்னை மயிலாப்பூரில் உள்ள வணிக வளாகம் பகுதிகளில் நள்ளிரவில் போதை மாத்திரைகள் விற்று வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள வணிக வளாகம் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisement

அதன்படி, இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது, வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி வந்தனர். இதை பார்த்த போலீசார் 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(19) மற்றும் ரவிக்குமார்(19) என தெரியவந்தது. அவர்கள் போதை மாத்திரைகளை மொத்தமாக ஆன்லைனில் ஆர்டர் செய்து வரழைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 83 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement