தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மழை ஓய்ந்தபின்னும் கோயம்பேடு மார்க்கெட்டில் குறையாத காய்கறி விலை

குன்றத்தூர், டிச.10: சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை அதிகரித்து காணப்பட்டதுடன், வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்டது. மழை ஓய்ந்து 2 நாட்களாகியும் விலை குறையவில்லை. இந்நிலையில், நேற்று சில காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, வெங்காயம் கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து, முதல் தரம் ரூ.30க்கும், இரண்டாம் தரம் ரூ.26க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஊட்டி கேரட் ரூ.10 உயர்ந்துள்ளது. இதன்மூலம் முதல் தரம் ரூ.50க்கும், இரண்டாம் தரம் ரூ.45க்கும், மூன்றாம் தரம் ரூ.40க்கும் விற்கப்பட்டது. கேரட் விலையில் மாற்றமின்றி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

​பீன்ஸ் ஒரு கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து, முதல் தரம் ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் தரம் ரூ.70க்கும், மூன்றாம் தரம் ரூ.65க்கும் விற்கப்பட்டது. தக்காளி முதல் தரம் ரூ.40க்கும், இரண்டாம் தரம் ரூ.35க்கும், மூன்றாம் தரம் ரூ.30க்கும், நவீன தக்காளி ஒரு கிலோ ரூ.50க்கும் விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் முதல் தரம் ரூ.70, இரண்டாம் தரம் ரூ.65, மூன்றாம் தரம் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. கர்நாடக வெங்காயம் ஒரு கிலோ ரூ.20ல் இருந்து ரூ.24 வரை விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ.40, ரூ.35, ரூ.23 என விற்கப்பட்டது. கர்நாடக பீட்ரூட் ரூ.25 முதல் ரூ.30 வரையும், சவ்சவ் ரூ.10 முதல் ரூ.15 வரையும், முள்ளங்கி ரூ.20 முதல் ரூ.25வரையும் விற்பனை செய்யப்பட்டது.

முட்டைக்கோஸ் ரூ.10 முதல் ரூ.15 வரையும், வெண்டைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரையும், உஜாலா கத்திரிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரையும், வரி கத்திரிக்காய் ரூ.10 முதல் ரூ.15 வரையும், காராமணி ரூ.35 முதல் ரூ.40 வரையும், பாகற்காய் ரூ.20 முதல் ரூ.25 வரையும் விற்பனையாகிறது. புடலங்காய் ஒரு கிலோ முதல் தரம் ரூ.25, இரண்டாம் தரம் ரூ.20க்கும், சுரக்காய் ரூ.20 முதல் ரூ.25க்கும், சேனைக்கிழங்கு ரூ.30 முதல் ரூ.40க்கும் விற்கப்பட்டது. முருங்கைக்காய் முதல் தரம் ஒரு கிலோ ரூ.250க்கும், இரண்டாம் தரம் ரூ.230க்கும், மூன்றாம் தரம் ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. சேமக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.20 வரையும், காலிபிளவர் ரூ.25 முதல் ரூ.35 வரையும், வெள்ளரிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரையும், ஜி.4 மிளகாய் ரூ.60க்கும், பச்சை மிளகாய் ரூ.30 முதல் ரூ.35 வரையும், பட்டாணி ரூ.80 முதல் ரூ.90 வரையும் விற்கப்பட்டது. இதேபோல், இஞ்சி முதல் தரம் ரூ.70, இரண்டாம் தரம் ரூ.65, மூன்றாம் தரம் ரூ.60க்கும், பூண்டு ரூ.110, ரூ.80, ரூ.50 ஆகிய விலையிலும் விற்கப்பட்டது.

Advertisement

Related News