தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூர் இள்ளலூர் சாலையில் உள்ள மதுக்கடையால் பொதுமக்கள் அவதி: இடம் மாற்ற கோரிக்கை

திருப்போரூர்,டிச.10: திருப்போரூர் இள்ளலூர் சாலையில் உள்ள மதுக்கடையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் ஓ.எம்.ஆர். சாலை பேருந்து நிலையம், ரவுண்டானா, மாமல்லபுரம் சாலை, இள்ளலூர் சாலை ஆகிய 4 இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதில் திருப்போரூரில் போலீஸ் குடியிருப்பு எதிரே இருந்த ஒரு மதுக்கடையும், பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு மதுக்கடையும், ரவுண்டானா அருகே இருந்த ஒரு மதுக்கடையும் மூடப்பட்டன. தற்போது இள்ளலூர் சாலையில் ஒரு மதுபானக்கடை மட்டும் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இந்த மதுபானக் கடையை கடந்துதான் இள்ளலூர், செங்காடு, காயார், வெண்பேடு, காட்டூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேருந்து வராத நேரங்களில் ஆட்டோ, சைக்கிள் போன்றவற்றிலும் சிலர் நடந்தும் கிராமங்களுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும் வழியிலேயே மதுக்கடை உள்ளதால் குடிமகன்கள் பெண்களை கிண்டல் செய்யும் சம்பவம் நடக்கிறது.

மேலும், அருகில் உள்ள ஏரிக்கரை மற்றும் வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பல்வேறு பொருட்களை கால்வாய்களிலும், விவசாய நிலங்களிலும் வீசிச்செல்கின்றனர்.

இந்த மதுக்கடை முன்பு ஏராளமான தற்காலிக கடைகளும் இப்பகுதியில் இயங்கி வருகின்றன. ஏரிக்கரைைய ஒட்டி அமைந்துள்ளதால் பலரும் தங்களது பைக்குகளை சாலையோரம் நிறுத்திவிட்டு மதுக்கடைக்கு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் திருப்போரூர் பேரூராட்சி எல்லைக்குள் இயங்கும் இந்த ஒரே மதுக்கடையை ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு மதுக்கடையை மாற்றுவதன் மூலம் பொதுமக்கள், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுவதோடு காவல்துறை பாதுகாப்பும் தேவைப்படாது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

Related News