தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணமான 9 நாளில் புதுப்பெண் ஓட்டம்

உத்திரமேரூர், செப்.10: வந்தவாசி அருகே திருமணமான 9 நாளில் காதலனுடன் புதுப்பெண் ‘எஸ்கேப்’ ஆனார். போலீசார் தேடி வந்த நிலையத்தில் காஞ்சிபுரம் காதலனுடன் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவர் பெற்றோர், புதுமாப்பிள்ளையுடன் செல்ல மறுத்ததால் காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்எலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவ(19). இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 29ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு உத்திரமேரூர் சென்றிருந்த புதுமண ஜோடி மறுவீட்டிற்காக கடந்த 6ம் தேதி தென் எலப்பாக்கம் கிராமத்திற்கு வந்தனர்.

Advertisement

அங்கு வீட்டில் இருந்த யுவ மறுநாள் திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் யுவயின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை, வந்தவாசி வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து யுவயை தேடி வந்தனர். விசாரணையில் யுவ, திருமணத்திற்கு முன்பு சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துள்ளார். அப்போது, அதே கம்பெனியில் வேலை செய்த காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் செவிலிமேடு பகுதிக்கு சென்றனர். அங்கு சேஷாத்திரி இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போலீசார், யுவயை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு யுவ, காதலன் சேஷாத்திரி ஆகியோர் காவல் நிலையம் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த யுவயின் பெற்றோர், அவரது கணவர் ஆகியோர், யுவயை தங்களுடன் வந்துவிடும்படி வற்புறுத்தினர். ஆனால், யுவ அதை ஏற்காமல் காதலனுடன்தான் செல்வேன் என பிடிவாதமாக இருந்தார். இந்நிலையில் யுவ மேஜர் என்பதால் அவருடைய முடிவுக்கு போலீசார் ஒப்புதல் தெரிவித்தனர். தொடர்ந்து காதலன் சேஷாத்திரியுடன், யுவ சென்றார். இதனை கண்ட புதுமாப்பிள்ளை, பெண்ணின் பெற்றோர் கதறி அழுதனர்.

Advertisement