தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

மதுராந்தகம், செப். 9: மதுராந்தகம் அருகே தாதங்குப்பம் கிராம மக்கள் சாலை அமைக்க கோரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் தாதங்குப்பம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திற்கு அப்பகுதி மக்கள் பக்கம் ஏரிக்கரை மீது உள்ள மண் பாதையில் சைக்கிள், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்று வந்தனர். இந்த ஏரிக்கரை மீது சாலை அமைக்க வேண்டும் என்று சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisement

இந்நிலையில், தற்பொழுது தாதங்குப்பம் கிராமத்திற்கு பாக்கம் ஏரிக்கரை மீது கனிம வள நிதிலிருந்து சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை தாதங்குப்பம் பகுதியை சேர்ந்த தனிநபர் வேலையை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த தாதங்குப்பம் கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு திரண்டு சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து தடைப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ஆய்வாளர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய நபர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், சாலை பணி தடை இன்றி நடைபெற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதால் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement