தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொட்டில் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி சிறுவன் பலி

ஸ்ரீபெரும்புதூர், டிச.8: சேலையில் தொட்டில் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி சிறுவன் பலியான சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவி. கணவனை இழந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பெரியார் தெருவில் தனது 12 வயது மகன் அணில்குமாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தேவி தனியார் தொழிற்சாலையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். அணில் குமாரை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.

Advertisement

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, நேற்று அணில் குமார் சேலை மூலம் தொட்டில் கட்டி விளையாடி வந்ததாக தெரிகிறது. அப்போது ஊஞ்சலில் அமர்ந்து, ராட்டினம் போல் சுற்றி விளையாடிய நிலையில் எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி சிறுவன் கூச்சலிட்டபடி மயங்கினான். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அணில்குமாரை இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அணில்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News