தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கழிவுநீரை வெளியேற்ற கிருஷ்ணா நதிநீர் கால்வாய் உடைப்பு செம்பரம்பாக்கம் ஏரிநீர் மாசடையும் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரும்புதூர், அக்.8: பெரும்புதூர் அருகே குடியிருப்புகள், தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்படுவதால், செம்பரம்பாக்கம் ஏரிநீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெரும்புதூர் அருகே தண்டலம் ஊராட்சியில் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர் தேக்கத்திலிருந்து திறக்கப்படும் நீர் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் பயணித்து செம்பரம்பாக்கம் ஏரியில் நேரடியாக கலக்கும். தண்டலம் ஊராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் வெளியேற்றபடுகிறது. இதனால், சென்னை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்குச்சென்று, ஏரிநீர் மாசடைந்து வருகிறது.

Advertisement

இதுகுறித்து, பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், தண்டலம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் மண்ணை கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையை பலப்படுத்தினர். இந்நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருவதால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து வெளியேற முடியாமல் கால்வாய் முன்பு குட்டைபோல தேங்கி நிற்கிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் சிலர், கால்வாயை சேதப்படுத்தி, கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், செம்பரம்பாக்கம் ஏரிநீர் மாசடையும் சூழல் உருவாகியுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயை சேதப்படுத்தும் நபர்கள் மீது அதிகாரிகளும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News