தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரத்தில் இடி மின்னலுடன் கனமழை

காஞ்சிபுரம், நவ.7: காஞ்சிபுரத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 என நாட்கள் வெயில் சுட்டெரித்த நிலையில், திங்கட்கிழமை திடீரென கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் செவ்வாய், புதன் கிழமைகளில் ஓரளவு மேகமூட்டமாக இருந்த நிலையில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

Advertisement

இதனால் காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. காஞ்சிபுரம் இரட்டை மண்டபம், ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, மேட்டுத் தெரு, கீரைமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. உலகளந்த பெருமாள் கோயில் எதிரில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வெளியேறியதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், தாமல், கீழம்பி, பெரும்பாக்கம், விஷார், பரந்தூர், ராஜகுளம், அய்யங்கார்குளம், புஞ்சை அரசன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Related News